POPULATION

Entire population of indian origin upcountry tamil people is currently estimated as 1.5 millian. out of this .75 millian people live outside tea estates and elswhere in the country.only 50% of the people live and work at tea estates and this containes of 3800 families.in 1950 ,six decades ago 90% of above population lived and dependants of tea estates . because of lower wage and poor living conditions people are try to find works outside tea estats and distracted from tea industry.if this tendancy continues in for another five decades there going to be hardley any single workers family going to be left inside in a tea estate.

a tea estate with dwelings

a tea estate with dwelings

it is so cold

it is so cold
there is no way out

sun set pictures near galle

sun set pictures near galle




perspective

perspective
imbulpitiya tea estate near nawalapitiya from the distance

new developments

new developments
after 1972when the parliament passed land ceiling act the hill country border plantations were divided into small portions given to sinhala peasants colonnialising the plantation districts.

workers children.....it is difficult to smile

workers children.....it is difficult to smile

Thursday, September 15, 2011

Posted: 14 Sep 2011 06:55 AM PDT

தானானே தானானே தந்திநத்தோம் தானானே
தானானே தானானே தந்திநத்தோம் தானானே

ஓராம் கரகம் எடுத்துக்கிட்டே கன்னியாம்
ஓரூரு மேளங்கள் கொட்டிகிட்டே கன்னியாம்
கொட்டி மொளக்கிக்கிட்டு போர கன்னி யாரது?
நான் தாண்டி கன்னி மயிலோட போறவ
மயிலோட போரியா மணம் பார்க்கப் போரியா
சீர்காழி அம்மனோட சேர்ந்தாடப் போரியா?

தானானே தானானே தந்திநத்தோம் தானானே
தானானே தானானே தந்திநத்தோம் தானானே
தானானே தானானே தந்திநத்தோம் தானானே
தானானே தானானே தந்திநத்தோம் தானானே

ஓராம் கரகம் எடுத்துக்கிட்டே கன்னியாம்
ஓரூரு மேளங்கள் கொட்டிகிட்டே கன்னியாம்
கொட்டி மொளக்கிக்கிட்டு போர கன்னி யாரது?
நான் தாண்டி கன்னி மயிலோட போறவ
மயிலோட போரியா மணம் பார்க்கப் போரியா
சீர்காழி அம்மனோட சேர்ந்தாடப் போரியா?

தானானே தானானே தந்திநத்தோம் தானானே
தானானே தானானே தந்திநத்தோம் தானானே
ஏய் ஆட்டக்காரா
ஏய் ஆட்டக்காரா
ஏய் அண்ணாமலே
ஏய் அண்ணாமலே
எல்லளவும்
எல்லளவும்
ஓ மனசும்
ஓ மனசும்
எளகலயா
எளகலயா

இவ்வகையில் எத்தனையோ மாரியம்மன் தாலாட்டுப் பாடல்கள் நம்மிடையே ஆங்காங்கே இன்றும் ஒலித்துக் கொண்டு இருக்கின்றன. அம்மை நோய் ஏற்படும் போது அதாவது 'அம்மாபாத்து' எனும் நோயைக் கூட நம்மவர்கள் அம்மன் நேரடியாக வந்து அவர்கள் மீது குடியேறியிருப்பதாக



ஏய் ஆட்டக்காரா
ஏய் அண்ணாமலே
ஏய் அண்ணாமலே
எல்லளவும்
எல்லளவும்
ஓ மனசும்
ஓ மனசும்
எளகலயா
எளகலயா

இவ்வகையில் எத்தனையோ மாரியம்மன் தாலாட்டுப் பாடல்கள் நம்மிடையே ஆங்காங்கே இன்றும் ஒலித்துக் கொண்டு இருக்கின்றன. அம்மை நோய் ஏற்படும் போது அதாவது 'அம்மாபாத்து' எனும் நோயைக் கூட நம்மவர்கள் அம்மன் நேரடியாக வந்து அவர்கள் மீது குடியேறியிருப்பதாக


Posted: 14 Sep 2011 06:46 AM PDT

நாட்டார் பாடல்களில் உறவுகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் தரப்பட்டதோ அதுபோல பக்திக்கும் அது நிறைவாகவே வழிசமைத்துள்ளது. மலையக மக்கள் வாழ்க்கையில் சிறு தெய்வ வழிபாடும் அவர்களது வாழ்வில் இரண்டறக் கலந்த ஒன்றாக உள்ளதை நடைமுறை வாழ்க்கையில் காணலாம்.
நாகராஜ் நிசாந்தினி ;மாரியம்மன் தாலாட்டையும் கும்மியையும்;' அறிமுகம் செய்யும்போது அதை அழகாக இவ்வாறு விழித்துப்போகின்றார்.' படைத்த மனிதனை பக்குவமாய்ப் பாதுகாக்க பாசத்தால் படைத்தான் தாயை....... வளர்ந்த மனிதனை வளமாய் ஆக்கிட வரவழைத்தான் தந்தையை ஆனாலும் கூட ஆண்டவனை மறக்க முடியாது:அவனால் படைக்கப்பட்ட எம்மைப் போன்ற ஜீவன்களுக்கு ........ ஒரு வாய்ப்பாக...' என இதனைக் குறிப்பிடுகின்றார்.

தன்னானே தானேனன்னே தானானே தானேனன்னே
தன்னானே தானேனன்னே தன்னானே – தனே
தானானே தானேனன்னே தன்னானே

மல்லிக முல்லரும்பா மலராத காயரும்பா
மணந்து மணக்குதிங்க தன்னானே – தானே
மாரியம்மன் வாசலில தன்னானே
தன்னானே தானேனன்னே தானானே தானேனன்னே

செம்புக முல்லரும்பா செவராத காயரும்பா
செவந்து மணக்குதிங்க தன்னானே – தானே
செல்லியம்மன் வாசலில தன்னானே
தன்னானே தானேனன்னே தானானே தானேனன்னே

தூண்டாமணி விளக்கு தூண்டத்தான் நின்னெரியும்
தூண்டாட்டியும் நின்னெரியும் தன்னானே – தானே
துர்க்கையம்மன் வாசலில தன்னானே – தானே
துர்க்கையம்மன் வாசலிலே தன்னானே
தன்னானே தானேனன்னே தானானே தானேனன்னே

தன்னானே தானேனன்னே தானானே தானேனன்னே
தன்னானே தானேனன்னே தன்னானே – தனே
தானானே தானேனன்னே தன்னானே





Posted: 13 Sep 2011 09:06 PM PDT

எழுதா இலக்கியம் என்பதாலோ இந் நாட்டார் பாடல்கள் ஒரு சமூக வழக்கைக் கொண்டிருந்தாலும் அவை பிரதேசத்திற்குப் பிரதேசம் மாறுபட்டுச் செல்வதைக் காண்க் கூடியதாக உள்ளது. பாடல் வரிகளிலும் கூட அவை மாறி மாறிச் செல்லும் பாங்கும் இருந்தாலும் அது எடுத்தாளப்பட்டுள்ள விதம் மிகவும் சிறப்பானதாய் இருக்கின்றது.
தாலாட்டுப் பாடல்கள் மலையகப் பிரதேசங்களில் முன்னுரிமை பெறுவதற்குக் காரணம் இல்லாமல் இல்லை! ஏன் தெரியுமா? கணவன், மனைவி இருவருமே தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிகின்றவர்கள்! தேயிலைத் தோட்டங்கள் தான் அவர்களுக்கு வீடு! முருங்கை மரம் தான் நிழல்! வேப்ப மரம் தான் தொட்டில்! பசும் புற்றரைகள் தான் பஞ்சு மெத்தைகள்! கருங்கற் திட்டுகள் தான் குசன் நாற்காலிகள்!அருவிகளும் ஓடைகளும் தான் 'டிஸ்டிலரிஸ் வாட்டர்'.இயற்கையே வாழ்க்கை! இது தானே நம் மக்களின் வாழ்க்கைக் கூடாரம்?
இந்த மக்கள் தம் தொழிலைச் சிறப்பாகச் செய்தாலே உணவு? எனவே தொழிலைச் செய்ய தன் பிளளைகளை உறங்கவைத்துத் தானே ஆகவேண்டும்? இதில் கடல் கடந்து ராமேஸ்வரம் முதரம் மன்னார் வரையும் அத்துடன் ஒவ்வொரு காட்டையும் தேயிலைத் தோட்டங்களாக மாற்ற அவர்கள் ஆற்றிய பணிகள்? அப்பப்பா? மெச்சாதோர் மெச்சாமலே இருக்கட்டும். நாம் நம்மைப் பாராட்டிக் கொள்ளத்தானே வேண்டு;ம்!
இந்த வேலைகளுக்கு மத்தியில் கால் வயிற்றுக் கஞ்சியை பெற்றுக் கொள்ள உழைக்கும் போது பிள்ளைகள் அழுதால் வேலையைச் செய்யத்தான் முடியுமா?
இதோ தன் வேலையையும் செய்ய அதே நேரம் தன் பிள்ளையும் அயர்ந்து தூங்க தாலாட்டுப்பாடல் வருகிறது!அது இதமாய் மனங்களின் மனதை மட்டுமல்ல அந்தக் குழந்தையின் மனதையும் வருடி சுகமாய்த் துயில வைக்கிறது. அந்த மலைக்காற்றின் இதமான காற்றும் வேப்ப மரத்தின் வாசமும் குழந்தையின் நாசிக்கும் தோளுக்கும் இயற்கை தந்த அரும் பெரும் கொடைகளல்லவா?
பாடலைப் பாருங்கள்!

ஆராரோ ஆரிரரோ ஆர் அடிச்சி நீ அழுக
மாமா அடிச்சாரோ மல்லிப்பூ கையாலே
அத்தை அடிச்சாலோ அரிய பூ கையாலே
பாட்டி அடிச்சாரோ பாலூட்டுங் கையாலே
ஆராரோ ஆர் அடிச்சி நீ அழுக!

கண்ணுக்கோ கண் எழுதி கடகனுமே மெய' எழுதி
மெய் எழுத மெய் எழுத மயங்கிவரும் நித்திரைகள்
நித்திரை போவாங்கோ கத்தரிப்பூத் தொட்டியிலே
தொட்டிக்குக் கீழ் துணையிருக்கும் மாரியம்மா
மாரி துணையம்மா மகமாயி காவல் அம்மா காலி
துணையிருப்பா காமாச்சி காவலிருப்பா – கண்ணுக்கோ
கண்ணாடி காலுக்கொரு ஈரண்டா ஈரண்டா
விலை மதிக்க வீரனோ உங்க மாமா
ஆர்ஆராரோ ஆரிரிவரோ ஆர் அடிச்சி நீ ஆழக!

மஞ்சள் கிழங்கு வெட்டி மாமே மத்தியானமே
வண்டி கட்டி மஞ்சள் மனக்குதம்மா உங்க
மாமா மகராசா போரா வண்டி இஞ்சி கிழங்கு
வெட்டி உங்க மாமா இளையராஜா போர வண்டி
இஞ்சி மனக்குதம்மா உங்க மாமா இளையராஜா போர வண்டி
ஆர்ஆராரோ ஆர் அடிச்சி நீ அழுக!

அன்னக்கிளி போகுதம்மா உனக்குச் சித்த தண்ணி
கொண்டுவர கொஞ்சுங்கிளி போகுதம்மா!
உனக்கு கோபங்கிளி கொண்டு வர மானத்து
மீனோ நீ மேகத்துப் பண்ணீரோ பாலவத்த
தீக்க வந்த தங்க இளநீரோ?
ஆர்ஆராரோ ஆர் அடிச்சி நீ அழுக
மஞ்சள் கிழங்கு வெட்டி மாமா மத்தியானமோ
வாரானம்மா அல்லி மகளே அருங்கிளியே
பெத்த கண்ணே புள்ளி மகளே நீ புண்ணியரே
பெத்தக் கண்ணே அல்லி பூ வள்ளி ரதுமோ
மகளே மேலவருங்கோ தங்க ரதம் ஏஞ் சொத்து
தவமாய்ப் பெத்து வந்த வந்தவனோ
ஆர் ஆராரோ ஆர் அடிச்சி நீ அழுக

கண்ணுமணி பொண்ணுமனி கந்தரோடு வேலுமணி
வேலுமணி வேணுமுனு வேண்டித் தவஞ் செய்தேன்.
அம்மா வள்ளினா வள்ளி மணல் மேல படரும்
வள்ளிக் கொடிப் படர்ந்த வள்ளியோடு கூட பொறந்தவனோ
ஆர் ஆராஆரோ ஆர் அடிச்சி நீ அழுக?
தாலாட்டு இடம் பொருள் பார்த்துச் சுவைக்காக எழுதப்பட்ட இலக்கியமல்ல! அது நம் வாழ்க்கையில் மக்களுடன் ஒட்டி உறவாடிய ஒரு அழகான இசைப் பேரின்பம்! செலவில்லாமல் அது ஒரு சுகப் பயணம்! காலத்தின் நம்பிக்கையான அடித்தளம் இந்த நாட்டுப்பாடல்கள்!

Posted: 13 Sep 2011 08:54 PM PDT

மனிதன் பிறக்கும் போதும் அழுகின்hன்:இறக்கும் போதும் அழுகின்றான்! மறைந்த சந்திரபாபுவனி; குரலில் அழுத்தமான சிந்தனைகள். ஒரு விடயத்தை மனிதன் அதிகமாகக் கவரும் ஊடகத்தில் சொல்லிவிடுவது இலகுவானது!
அந்தக் காலத்தில் அறிவியல் உலகம் மனிதனை ஆக்கிரமித்துக் கொள்ளாத வேலையில் ஓய்வு நேரங்களையும்: உழைப்பு நேரங்களையும்: துயர நேரங்களையும் என தன் வாழ்வியலோடு அவன் எழுதா இலக்கியமான நாட்டார் பாடல்களை இலாவகமாகக் கையாண்டான்! இப் பாடல்களில் மனிதனின் வாழ்வில் நிலையாமையாகிய இவ் உடம்பு பிரியும்போது அவன் உறவுகள் படும் துயரங்களை 'ஒப்பாரிப் பாடல்களினூடாக' அவன் - அவள் -அவர்கள் தரும் பாடல்கள் இனிமையானவை என்பதை விட ஆழமான துயரங்களின் சாகரங்கள்!
செல்வி.நாகராஜ் நிசாந்தினியின் தொகுப்பில் ஒப்பாரிப் பாடல்களை 'தாய் மடியில் பிறந்து தாலாட்டு கேட்ட எம்மை அழைக்கிறான் தேவன்- அவன் உறவுகளை விட்டுச் செல்ல உடைழந்த மனதின் முடிவுரையாக அமைகின்றது இந்த ஒப்பாரி........................' முகவுரை தந்திரும் தொகுப்பாளினி இன்னும் நிறைய பாடல் தொகுப்புகளைத் திரட்டி மக்கள் கவனத்திற்குக் குறிஞ்சிப் பண்ணையினூடாகக் கொண்வரலாம்.
இங்கு பாருங்கள்!ஒப்பாரியில் அழகியல் நயத்தை! இதில் தான் எத்தனை தமிழ் நயம்? காலம் இளம் சிட்டுகளை இதில் லயிக்க வைக்காவிட்டாலும் இளம் சமூகத்தினரிடையே இப் பாடல்களும் அக்கால மக்களின் வாழ்க்கைச் சுவையையும் ரசித்து சுவைக்க வேண்டும்!

ஆசக்கி இளந்தோட்டம் - நம்ம வாச
ஆளில்லா பூந்தோட்டம்
அரும்பொடிக்கப் போகயில
ஒரு அழகு ரதம் கண்டியலா?

முருங்க இளந்தோட்டம் - நம்ம வாச
முள்ளில்லா பூந்தோட்டம்
முள்ளில்லா பூந்தோட்டம்
முள்ளில்லா பூந்தோட்டம்
பூவொடிக்க போகயில
ஒரு பொண்ணு ரதம் கண்டியலா?
பொல்லாத எமனோட – நீங்க
போக வரம் கேட்டியலா?
Posted: 14 Sep 2011 06:55 AM PDT
‘காகந் திட்டி மாடு சாகாது’ என்ற பழமொழி மனித வாழ்க்கையில் பிண்ணிப் பிணைந்த ஒன்று.அது எப்படி காகத்தால் மாட்டைத் திட்ட முடியுமா? என்பது காதில் கேட்கிறது.ஏன் முடியாது!அது குரலில் ‘கா.. கா...’ என்று கரையாமல் கத்தினால் குரல் வளையில் மாற்றம் ஏற்பட்டால் அது காகத்தின் மொழி தானே! அந்தக் குரலில் அது திட்டலாம் அல்லவா? ஆனால் மாடு? எதனையும் செய்யாத ஒருவனை ‘மாடு’ அல்லது ‘எருமைமாடு’ என்று தானே திட்டுகிறோம்! அப்படியென்றால் காகந் திட்டுவதால் மாடு சாகுமா?
இதுபோல மனிதனுக்கு வரும் ‘பழிச் சொற்கள்’ தான் எத்தனை?எத்தனை? அவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் செயற்பட்டால் வெற்றி நிச்சயம் தானே! அதுதான் மாட்டைப்போல கணக்கெடுக்காமல் இருந்துவிட்டால் நம் மீது வரும் பழிச்சொல் கண்டு பயப்படத் தேவையில்லையே! ஆக நாம் சில மனிதர்களிடம் சில நேரம் மாட்டைப்போல இருந்துவிட்டால் இந்தப் பழிச் சொல் நம்மைத் தாண்டி ஓடிவிடும் என்பதும் உண்மைதானே! நாம் வெல்ல,காலத்தை வெல்ல இந்தச் சுழியோடிகளிடமும் தப்பிக்க வேண்டாமா?எனவே,அவ்வப்போது ‘காகந் திட்டி மாடு சாகாது’ என்பதை நினைத்துக் கொள்ளுங்கள்! வாழ்வை வெல்லலாம்!
Posted: 14 Sep 2011 06:55 AM PDT


வெண் திரையில்
மைப் பொட்டிட்டு
வேல் விழாக் காணும்
போர்த் தொடுப்புகள்!

விழிகளோடு
வழக்காடினால்
எக்ஸ்ரேயின்
நேர்ப் பிம்பங்கள்!

தூர தரிசனத்தை
வெள்ளை ஒற்றையில்
ஓவியம் கீறும்
கெமராக்கள்!

விழுவதும் எழுவதும்
மீள்வதும் ஆள்வதும்
இவையின் அற்புதங்கள்!

அடிக்கடி மின்னல்கள்
அடிக்கடி துடிப்புகள்
மூடி மூடித் திறக்கும் போது
முத்துக் குளிக்கும்
தரிசனங்கள்!

இவைகள் நியாயப்படுத்த
முடியாத கோட்டுக்காயங்கள்!